×

பேஸ்புக்கில் விஷம பிரச்சாரம் பழநியில் இந்து முன்னணி நிர்வாகி மீது புகார்

பழநி, ஜன. 27: பழநியில் வட்டார ஜமாத்தாரர்கள், னைத்து இஸ்லாமிய இயக்கங்களின் சார்பில் டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனு: இந்து முன்னணி கோட்ட செயலாளர் பாலன் என்பவர் பேஸ்புக்கில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இதில் கோயிலுக்கு சொந்தமான கடைகளை இஸ்லாமியர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். கோயிலுக்கு வரும் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் வீடியோ எடுக்கின்றனர். பழநி பஸ்நிலையத்தின் கடைகளை ஆக்கிரமிப்பு செய்து அராஜகம் செய்கின்றனர் என்று பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளார். மேலும் பழநி கோயிலில் ஒலி, ஒளி அமைப்பது, பஞ்சாமிர்தம் தயாரிப்பிற்கான வாழைப்பழம் விநியோகம் செய்வது போன்ற டெண்டர்களிலும் முஸ்லீம்கள் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி உள்ளார். இதுபோன்ற விஷம பிரச்சாரங்களால் இந்து- முஸ்லீம் ஒற்றுமைகள் சீர்குலையும் நிலையை ஏற்படுத்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.  எனவே, மேற்கண்ட நபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Poison campaign ,executive ,Palani ,Hindu Front ,
× RELATED பழநி நகராட்சி மக்கள் கவனத்திற்கு